by Bella Dalima 23-04-2021 | 4:19 PM
Colombo (News 1st) மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்திலுள்ள வசாய்-விரார் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், சில நோயாளிகள் அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், கொரோனா பெருந்தொற்று ஆரம்பமானது முதல் மகாராஷ்டிரா மாநிலத்திலேயே தொடர்ச்சியாக அதிகூடிய நோயாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இந்நிலையில், வைத்தியசாலைகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகளற்ற நிலையில், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு ஒக்சிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்படுள்ளது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவின் நாசிக்கில் ஒக்சிஜன் கசிவு காரணமாக 24 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.