கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரிப்பு

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 23-04-2021 | 3:17 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 98,722 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 657 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே 05 கொரோனா மரணங்கள் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. மொரட்டுவையை சேர்ந்த 80 வயதான ஆணொருவரும் கண்டியை சேர்ந்த 63 வயதான ஆணொருவரும் பேலியகொடையை சேர்ந்த 71 வயதான ஆணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன், கொட்டமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 76 வயதான ஆணொருவரும் நாராஹேன்பிட்டியை சேர்ந்த 77 வயதான பெண்ணொருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளானோரில் இதுவரை 93,884 பேர் குணமடைந்துள்ளனர்.