ஓமந்தையில் ரயிலில் மோதி 16 எருமை மாடுகள் உயிரிழப்பு

by Bella Dalima 22-04-2021 | 3:28 PM
Colombo (News 1st) வவுனியா - ஓமந்தையில் ரயிலில் மோதி 16 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் மோதியே அவை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் ரயிலில் மோதுண்டுள்ளன. மேய்ச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேய்ச்சலுக்காக வேறு இடகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், அவை வீதியோரங்கள், ரயில் பாதைகளுக்கு அருகிலேயே மேய்வதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.