24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 6 பேர் பலி

24 மணி நேரத்தில் 6 உயிர்களை காவுகொண்ட வாகன விபத்துக்கள்

by Staff Writer 21-04-2021 | 11:42 AM
Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 06 பேர் உயிரிழந்துள்ளனர். இதேநேரம், கடந்த 13 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி 75 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார். 08 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். அதிக வேகம் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய காரணங்களினால் இந்த விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.