தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

மாத்தளன் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்ளூர் மீனவர்கள் கைது

by Staff Writer 21-04-2021 | 4:31 PM
Colombo (News 1st) முல்லைத்தீவு - மாத்தளன் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் 4 சிறு படகுகள் கைப்பற்றப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவி பணிப்பாளர் விஸ்வலிங்கம் கெலிஸ்டன் தெரிவித்தார். நேற்று 02 மீனவர்களும் இன்று 04 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (20) கைது செய்யப்பட்ட 2 மீனவர்களும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டதாக விஸ்வலிங்கம் கெலிஸ்டன் குறிப்பிட்டார்.