by Staff Writer 21-04-2021 | 10:50 AM
Colombo (News 1st) நாடு திரும்பும் இலங்கைப் பணியாளர்களை தனிமைப்படுத்துவதற்காக ஏழு அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்களை ஒதுக்குவதற்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமது பணியகத்தில் பதிவு செய்துகொண்டுள்ள பணியாளர்களுக்கு மாத்திரம் இந்த வசதி இலவசமாக வழங்கப்படவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொதுமுகாமையாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.