கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 21-04-2021 | 8:25 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (21) 05​ கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது. மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.