விஜயதாச ராஜபக்சவின் மகன் கைதாகி பிணையில் விடுவிப்பு

by Bella Dalima 20-04-2021 | 4:15 PM
Colombo (News 1st) நேற்று (19) இரவு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச கைது செய்யப்பட்டு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். SUV ஒன்றும் கார் ஒன்றும் நேற்றிரவு 10.30 அளவில் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். SUV வாகனத்தை ரக்கித ராஜபக்ச செலுத்தியதாகவும் காரில் பயணித்த நால்வர் விபத்தில் காயமடைந்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார். ரக்கித ராஜபக்ச தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதுடன் நீதவான் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதன் பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.