அல்வாயில் உறவினர்களிடையே மோதல்; ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 20-04-2021 | 4:50 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 32 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர். காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்வாய் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உறவினர்களிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக வலுப்பெற்றுள்ளது. இதன்போது, கூரான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் பொலிஸார் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.