மனுக்கள் மீதான இரண்டாம் நாள் பரிசீலனை ஆரம்பம் 

துறைமுக நகர சட்டமூலம்; மனுக்கள் மீதான இரண்டாம் நாள் பரிசீலனை ஆரம்பம் 

by Staff Writer 20-04-2021 | 10:54 AM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்தை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (20) இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. இந்த விசேட மனுக்கள் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் நேற்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை ஆட்சேபனைக்கு உட்படுத்தி அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.