செவ்வாயில் ​முதலாவது ஹெலிகொப்டர் பயணம்

செவ்வாயில் ​முதலாவது ஹெலிகொப்டர் பயணம்

by Staff Writer 20-04-2021 | 8:25 AM
Colombo (News 1st) செவ்வாயில் ​வெற்றிகரமாக இன்ஜெனியூட்டி (Ingenuity) ஹெலிகொப்டர் பறக்கவிடப்பட்டுள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட கருவி வேறொரு கோளில் இதுவரை பறக்கவிடப்பட்டதில்லை என்ற நிலையில், நாசாவின் இந்த கன்னி முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. செய்மதி தகவல்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த மைல்கல் முயற்சியைத் தொடர்ந்து இவ்வாறான மேலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.