by Bella Dalima 20-04-2021 | 4:05 PM
Colombo (News 1st) அனைத்து மே தின நிகழ்வுகளையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உறுதிப்படுத்தினார்.