இலங்கை படகு இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

ஹெரோயின் உடனான இலங்கை படகு இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

by Staff Writer 19-04-2021 | 10:31 PM
Colombo (News 1st) இலங்கையின் படகொன்றிலிருந்து 340 கிலோகிராம் ஹெரோயின் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. படகிலிருந்த ஐந்து சந்தேகநபர்களையும் இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சந்தேகநபர்கள் ஐவரும் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.