போதைப்பொருள் அதிகாரிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் 

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 19-04-2021 | 1:34 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் 16 அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஶ்ரீ ராகல இன்று (19) உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தற்கார்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகள் 16 பேரும் சிவிலியன்கள் நால்வரும் உள்ளடங்குகின்றனர்.