பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க தீர்மானம்

பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானம் 

by Staff Writer 19-04-2021 | 5:59 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்தார்.