ஒரு வாரத்திற்கு முடக்கப்படும் இந்திய தலைநகர்

கொரோனா இரண்டாம் அலை; ஒரு வாரத்திற்கு முடக்கப்படும் இந்திய தலைநகர்

by Staff Writer 19-04-2021 | 3:14 PM
Colombo (News 1st) இந்திய தலைநகர் டில்லி ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்வதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென டில்லி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டில்லியில் நேற்றைய தினம் (18) 24,462 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்தியாவில் இம்மாதம் ஆரம்பம் முதல் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.