கிளிநொச்சியில் உடும்புகளுடன் ஒருவர் கைது

by Staff Writer 19-04-2021 | 4:56 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - வட்டக்கச்சி, புதுக்காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சியாக்குவதற்கு தயாராக வைத்திருந்திருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்டு 5 உடும்புகளை மீட்டு சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டார். கிளிநொச்சி நீதவானின் உத்தரவிற்கமைய, உடும்புகள் சுண்டிக்குளம் சரணாலயத்தில் இன்று பிற்பகல் விடுவிக்கப்பட்டன.

ஏனைய செய்திகள்