யாழில் கடும் மழையால் வெங்காய செய்கை பாதிப்பு

யாழில் கடும் மழையால் வெங்காய செய்கை பாதிப்பு

by Staff Writer 17-04-2021 | 6:19 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வெங்காய செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயம் செய்கை பண்ணப்படும் மாவட்டங்களில் யாழ். மாவட்டமும் முதன்மையானது. சங்கானை, சண்டிலிப்பாய் உள்ளிட்ட பல பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர் நிலங்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் ஜீவனோபாயம் கேள்விக்குரியாகியுள்ளது.