துறைமுக நகர திட்டம் தொடர்பில் தேரர்களை தௌிவுபடுத்துங்கள்: அஸ்கிரி பீட பதிவாளர் கோரிக்கை

by Staff Writer 17-04-2021 | 8:22 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து மகா சங்கத்தினரை தௌிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் வலியுறுத்தினார்.
குறித்த சட்டமூலத்தின் ஊடாக நாட்டிலுள்ள சட்ட வரையறைக்குள் சிற்சில நிர்வாக நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படலாம் என அறியக்கிடைக்கிறது. எவ்வாறாக இருந்தாலும் இது தொடர்பாக தௌிவூட்டல் வழங்கப்படவில்லை. ஆகவே, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தௌிவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்
என மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார். ஏதாவது ஒரு விடயம் நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இணங்காமல் இருப்பதே தமது நோக்கமென மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார்.