by Staff Writer 17-04-2021 | 3:55 PM
Colombo (News 1st) ஹட்டன் - கினிகத்ஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு (Aberdeen Water Falls) நீராடச் சென்ற சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தை - நெல்சன் பிளேஸை சேர்ந்த 15 வயதான சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் கினிகத்ஹேன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.