நில்வலா கங்கையில் மனிதத் தலை கண்டுபிடிப்பு

நில்வலா கங்கையில் மனிதத் தலை கண்டுபிடிப்பு

by Staff Writer 16-04-2021 | 4:08 PM
Colombo (News 1st) மாத்தறை - நில்வலா கங்கையின் தொட்டமுன பகுதியில் ஆண் ஒருவரின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்திலிருந்து அகற்றப்பட்ட தலைப் பகுதி நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மனித எச்சம் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.