களுபஹனவில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயினர்

களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இருவர் காணாமல் போயினர் 

by Staff Writer 15-04-2021 | 3:42 PM
Colombo (News 1st) ஹல்துமுல்லை - களுபஹன பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹரகமவ பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (15) பிற்பகல் வேலி- ஓயா பாலத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. காணாமல் போனவர்களை தேடுவதற்காக, இராணுவத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் E.M.L. உதயகுமார குறிப்பிட்டார்.  

ஏனைய செய்திகள்