மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம் 

அடுத்த வருடம் முதல் 3 தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்க திட்டம் 

by Staff Writer 15-04-2021 | 1:37 PM
Colombo (News 1st) அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைகளிலும் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி மறுசீரமைப்பு, தொலைதூரக் கல்வி, திறந்த பல்கலைக்கழகங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.