அசேல சம்பத்திற்கு 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

அசேல சம்பத்திற்கு 19ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 14-04-2021 | 6:42 PM
Colombo (News 1st) சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (14) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனி முறைகேடு, தேங்காய் எண்ணெய் விவகாரம் மற்றும் சதொச நிவாரணப்பொதி தொடர்பில் கடந்த நாட்களில் விமர்சனங்களை முன்வைத்த குற்றச்சாட்டில் அசேல சம்பத் நேற்று (13) கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.