4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

4 கொரோனா மரணங்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 13-04-2021 | 3:34 PM
Colombo (News 1st) மேலும் 4 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மஹரகம, அக்குரஸ்ஸ, நாரஹேன்பிட்ட மற்றும் காலி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நால்வரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.