நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ வரையான கடும் மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ வரையான கடும் மழை 

by Staff Writer 13-04-2021 | 6:57 PM
Colombo (News 1st) சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு தேவையான நடைமுறைகளை பின்பற்றுமாறு திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.