போதைப்பொருள் அதிகாரிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் 

போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 12-04-2021 | 4:04 PM
Colombo (News 1st) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகல முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.