by Staff Writer 11-04-2021 | 2:09 PM
Colombo (News 1st) சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என COVID - 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர், இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
உலகின் சில நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவும் காலகட்டத்திலேயே இலங்கை மக்கள் சித்திரை புத்தாண்டை கொண்டாடுவதாக அவர் கூறியுள்ளார்.