அரசாங்கத்தால் 5,000 ரூபா கொடுப்பனவு

புதுவருடத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் 5,000 ரூபா கொடுப்பனவு 

by Staff Writer 10-04-2021 | 1:44 PM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு, ​கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்காக 5,000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டார். ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். புதுவருடத்திற்கு முன்னர் இந்த சலுகையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலணி மற்றும் சமுர்த்தி திணைக்களத்துடன் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.