சதொசவில் நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்பனை

சதொசவில் நிர்ணய விலையில் கோழி இறைச்சி விற்பனை

by Staff Writer 10-04-2021 | 3:51 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கோழி இறைச்சியை சதொசவில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிர்ணய விலையை விட அதிக விலைக்கு கோழி இறைச்சியை விற்பனை செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, பண்டிகைக் காலத்தில் இதுவரை அத்தியவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.