குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம்

குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளருக்கு இடமாற்றம் 

by Staff Writer 10-04-2021 | 2:10 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சாவுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிஷாந்த டி சொய்சா, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.