ஐஸ் போதைப்பொருளுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் மாளிகாவத்தையில் ஒருவர் கைது

by Staff Writer 10-04-2021 | 1:53 PM
Colombo (News 1st) கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (10) அதிகாலை 2.30 மணியளவில் கொழும்பு மத்திய ஊழல் ஒழிப்புப்பிரிவினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஒரு கிலோ 250 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 70 வயதான சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.