3.4 பில்லியன் நட்டஈடு செலுத்துமாறு அறிவிப்பு

3.4 பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு MT New Diamond கப்பல் உரிமையாளருக்கு சட்டமா அதிபர் அறிவிப்பு

by Staff Writer 09-04-2021 | 5:35 PM
Colombo (News 1st) எண்ணெய் கசிவினால் சமுத்திரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு 3.423 பில்லியன் ரூபா நட்டஈடு செலுத்துமாறு MT New Diamond கப்பல் நிறுவனத்தின் சட்டத்தரணிகளுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். MT New Diamond கப்பலின் இலங்கையிலுள்ள நிறுவனத்திற்கு சட்ட மா அதிபரால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டார். நட்ட ஈட்டை பெறும் வழிமுறைகள் தொடர்பில் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர கூறினார்.