போதைப்பொருள் கடத்தல்காரர் சீட்டி கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் சீட்டி கைது

by Staff Writer 09-04-2021 | 3:19 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரரான "சீட்டி" என்றழைக்கப்படும் சரத்குமார முல்லேரியா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்தியாவில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் 'அங்கொட லொக்கா' என்பவர் முதலில் "சீட்டி" என்ற குறித்த நபரை குற்றச்செயல்களில் ஈடுபடுத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வெலிகம பகுதியில் கைப்பற்றப்பட்ட 112 கிலோ போதைப்பொருள் தொடர்பான சம்பவத்தின் ஒன்பதாவது சந்தேகநபரே "சீட்டி" எனவும் அவர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

ஏனைய செய்திகள்