புத்தாண்டில் சிறைக்கைதிகள் உறவினர்களை பார்வையிட சந்தர்ப்பம் மறுப்பு

புத்தாண்டில் சிறைக்கைதிகள் உறவினர்களை பார்வையிட சந்தர்ப்பம் மறுப்பு

புத்தாண்டில் சிறைக்கைதிகள் உறவினர்களை பார்வையிட சந்தர்ப்பம் மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Apr, 2021 | 4:05 pm

Colombo (News 1st) இம்முறை புத்தாண்டில் சிறைக்கைதிகளுக்கு தமது உறவினர்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

COVID தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புது வருட தினத்தில் சிறைக்கைதிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, சிறைக்கைதிகள் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் தமக்கான விசேட உணவுகளை பெற்றுக்கொள்ள சிறைச்சாலை உணவகத்தில் 1000 ரூபாவை வைப்பிலிட வேண்டுமென சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்