Colombo (News 1st) நேற்று (06) முதல் இன்று (07) காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்தது.
அவர்களில் 19 தொற்றாளர்கள் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர்.
கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 29 பேரும் கண்டி மாவட்டத்தில் 08 பேரும் பதுளை மாவட்டத்தில் ஒருவரும் நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும் யாழ். மாவட்டத்தில் 22 பேரும் புத்தளம் மாவட்டத்தில் ஒருவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் திருகோணமலை மாவட்டத்தில் ஒருவரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இன்று (07) காலை வரையில் 93,772 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 90,708 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் (06) 2 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டன.
பிபிலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதனடிப்படையில், நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (06) 6,227 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.