by Staff Writer 06-04-2021 | 10:32 AM
Colombo (News 1st) வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் எதிர்வரும் நாட்களில் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெறவேண்டிய அவசியம் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில், நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
எனினும், அனுமதியை பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெறாது வௌிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்கு வருகை தர முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.