தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழப்பு 

புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழப்பு 

by Staff Writer 06-04-2021 | 10:00 AM
Colombo (News 1st) குளியாப்பிட்டியவில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். வாரியபொல சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை, நேற்றிரவு (05) திடீர் சுகயீனமடைந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். சந்தேகநபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். திலிப் குமார் என்றழைக்கப்படும் 37 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் பாதுகாப்பு நடைமுறைகளுடன் கூடிய வகையில் வாரியபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.