பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை 

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்க நடவடிக்கை 

by Staff Writer 06-04-2021 | 7:19 AM
Colombo (News 1st) புதுவருடத்தின் பின்னர் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைக் கோவையொன்றை பல்கலைகழகங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, பல்கலைக்கழங்களில் கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது பல்கலைக்கழகங்களில் பரீட்சைகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.