தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் முதல் 1,000 ரூபா

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் முதல் 1,000 ரூபா சம்பளம் 

by Staff Writer 06-04-2021 | 11:59 AM
Colombo (News 1st) ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ரமேஸ் பத்திரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்றம் நியாயமான முறையில் ஆராய்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நீதிமன்ற அனுமதிக்கு அமைய, ஏப்ரல் மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஸ் பத்திரண குறிப்பிட்டுள்ளார்.