by Staff Writer 05-04-2021 | 1:53 PM
Colombo (News 1st) ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதை தடுத்து இடைக்கால தடையுத்தரவு விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோர் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.