by Staff Writer 05-04-2021 | 3:24 PM
Colombo (News 1st) தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல், அநுராதபுரம், பெலிஅத்த உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 09 ஆம் திகதி தொடக்கம் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.