அமைச்சரவை உப குழு அறிக்கை நாளை ஜனாதிபதிக்கு

4/21 தாக்குதல்: அமைச்சரவை உப குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டம் 

by Staff Writer 04-04-2021 | 3:59 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை நாளை (05) ஜனாதிபதியிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சரவை உப குழுவின் அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக குழுவின் செயலாளர், ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனதீர குறிப்பிட்டார்.