Colombo (News 1st) சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமை மற்றும் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் புத்தளத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல்லேவெல - வெஹெரகொட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவுல பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தவிர வான்எல பகுதியில், அரச காணியொன்றுக்குள் அனுமதியின்றி பெக்கோ இயந்திரமொன்றின் உதவியுடன் மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.