by Staff Writer 04-04-2021 | 3:01 PM
Colombo (News 1st) கடுகன்னாவ மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மீவதுர முதல் மரதன்கொட வரையுள்ள நீர்ப்பம்பியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்ப்பம்பியை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று மாலை வேளைக்குள் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்ப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.