by Staff Writer 04-04-2021 | 9:06 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அடுத்த சில நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் தயாராகவுள்ளதாக வௌியாகும் தகவலை சட்ட மா அதிபர் நிராகரித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான சாட்சிகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் விசேட குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.