இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு

அவிசாவளையில் இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு; விசாரணைகள் ஆரம்பம்

by Staff Writer 03-04-2021 | 4:18 PM
Colombo (News 1st) அவிசாவளை - மாதொல பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய அரச இரசாயன பகுப்பாளர் வரவழைக்கப்பட்டுள்ளார். நேற்று (02) மாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு எரிவாயு விளக்கு வெடித்ததே காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புவக்பிட்டிய பகுதியை சேர்ந்த 50 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்