3 தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் கொள்வனவு  

3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானம்

by Staff Writer 02-04-2021 | 4:18 PM
Colombo (News 1st) தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களினூடாக சபையின் அவசர மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். நீர் மின்னுற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படும் காலப்பகுதியில் இந்த மின் நிலையங்களினூடாக நாளாந்தம் 170 மெகா வாட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கமைய, குறித்த 3 தனியார் மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.