பொல்வத்த சந்தியில் விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு

பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு

by Staff Writer 02-04-2021 | 5:29 PM
Colombo (News 1st) பன்னிப்பிட்டிய - பத்தரமுல்ல வீதியில் பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25 மற்றும் 27 வயதான யட்டியாந்தோட்டை, மீகொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் அருகிலிருந்த மின்சார கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டு நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல காரின் சாரதிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மஹரகம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.