இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கலாம்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடிக்க அனுமதிப்பத்திரம் வழங்கலாம்: டக்ளஸ் தேவானந்தா யோசனை

by Bella Dalima 31-03-2021 | 8:47 PM
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா BBC தமிழ் சேவைக்கு தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்தி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, இலங்கை கடற்பரப்பினுள் பிரவேசிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்க யோசனை முன்வைத்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.